முல்லைத்தீவில் இராணுவ சோதனை சாவடிக்கு முன்னால் விபத்து : ஐவர் படுகாயம்!!

316

ஐவர் படுகாயம்

முல்லைத்தீவில் இராணுவத்தினரின் சோதனை சாவடிக்கு முன்னால் மூன்று விபத்து சம்பவங்கள் பதிவாகியுள்ளது. குறித்த விபத்துக்களில் சிக்கி ஒரு சிறுவன் உட்பட ஐந்து பேர் முல்லைத்தீவு மாஞ்சோலை வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவருகின்றனர்.

இதன்படி இன்று காலை முள்ளியவளை தண்ணீருற்று இராணுவ சோதனை சாவடியில் வாகன விபத்திற்கு உள்ளாகிய வயோதிபர் ஒருவர் படுகாயமடைந்தார். மேலும் இன்று பிற்பகல் முள்ளிவாய்க்கால் இராணுவ சோதனை சாடிக்கு அருகில் நடந்து சென்றுகொண்டிருந்த சிறுவன் ஒருவர் மீது கார் ஒன்று மோதி விபத்துக்குள்ளாகியது. இதில் குறித்த சிறுவன் படுகாயமடைந்த நிலையில் மாஞ்சோலை வைத்தியசாலை அவசரப்பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதேவேளை சற்று முன்னர் முள்ளியவளை வித்தியானந்தா கல்லூரிக்கு அருகாமையில் ஏற்பட்ட வாகன விபத்தில் மூவர் படுகாயமடைந்து மாஞ்சோலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.