வவுனியா ஓமந்தை சித்திவிநாயகர் ஆலய வசந்த மண்டபத்திற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு!!

461

அடிக்கல் நாட்டும் நிகழ்வு

வவுனியா ஓமந்தை ஸ்ரீ சித்திவிநாயகர் ஆலய வசந்த மண்டபத்திற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு நேற்று (16.06) மதியம் 12 மணியளவில் ஆலயபரிபாலனசபையின் நிர்வாக சபை உறுப்பினர் வே.சந்திரமோகன் தலைமையில் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன், மன்னார் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் சி.குணபாலன் உட்பட பலரும் கலந்துகொண்டு வசந்த மண்டபத்திற்கான அடிக்கல்லினை நாட்டிவைத்தனர்.

வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதனின் கம்பரெலிய நிதியில் ஐந்து இலட்சம் ரூபாவில் ஆரம்பிக்கப்பட்டுள்ள வசந்த மண்டபம் 30 இலட்சம் ரூபா செலவில் கிராம மக்களின் பங்களிப்புடன் அமைக்கப்படவுள்ளது.

இந் நிகழ்வில் ஆலய நிர்வாக சபை உறுப்பினர்கள், கிராம அமைப்புக்கள், அப்பகுதி கிராம மக்கள் எனப்பலரும் கலந்துகொண்டனர்.