வவுனியாவில் நாளை நீர் வினியோகம் துண்டிப்பு!!

481

நீர் வினியோகம் துண்டிப்பு

வவுனியாவில் நாளை (19.06) நீர் வினியோகம் துண்டிக்கப்படும் என நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபையின் நிலைய பொறுப்பதிகாரி வி.ராகுலன் தெரிவித்துள்ளார்.

நாளைய தினம் நடைபெறவுள்ள திருத்த வேலை காரணமாக காலை 8.00 மணிமுதல் மாலை 5.00 மணிவரை வவுனியா மாவட்டத்தில் நீர் வினியோக நடவடிக்கைகள் நிறுத்தப்படுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் மணிப்புரம்,சுந்தரபுரம், தோணிக்கல், பண்டாரிக்குளம் மற்றும் உக்குளாங்குளம் பகுதிகளில் புதிய நீர் வினியோக இணைப்புக்கள் வழங்கப்படவுள்ளதுடன் வவுனியாவில் 2019 ஆம் ஆண்டு 343 இணைப்புக்களும் மொத்தமாக 2728 நீர் வினியோக இணைப்புக்கள் வழங்கப்பட்டுள்ளதாக மேலும் தெரிவித்தார்.