வவுனியாவிற்கு வருகைதந்த வடமாகாண ஆளுநர் : வெயிலில் காத்திருந்த பாடசாலை மாணவர்கள்!!

319

வவுனியாவிற்கு வருகைதந்த வடமாகாண ஆளுநர்

வவுனியாவில் நிலவும் கடும் வெப்பத்தின் மத்தியில் வடமாகாண ஆளுனர் கலாநிதி சுரேன் ராகவன் அவர்களின் வருகைக்காக 30நிமிடங்களுக்கு மேல் பாடசாலை மாணவர்கள் காத்திருந்தனர்.

வவுனியா முன்று முறிப்பு ஸ்ரீ குணானந்த ஆரம்ப பிரிவு வித்தியாலத்தில் இந்திய பொதுமக்களின் நிதி பங்களிப்பில் அமைக்கப்பட்ட பாடசாலை கட்டிடத்தினை திறந்து வைக்கும் நிகழ்வு இன்று காலை 8.15 மணிக்கு ஆளுனர் தலைமையில் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது.

ஆளுனரின் வருகைக்காக பான்ட் வாத்தியங்களுடனும் மாலையுடனும் வவுனியாவில் நிலவி வரும் கடும் வெப்பத்தின் மத்தியிலும் மாணவர்கள் காத்திருந்தனர்.

ஆளுனர் வருகையின்மை தாமதமானதினையடுத்து சில மாணவர்கள் அருகேயிருந்த மரத்துக்கு கீழ் அமர்ந்து இருந்தனர். எனினும் ஆளுனர் 8.45 மணியளவிலேயே பாடசாலைக்கு சமூகமளித்திருந்தார். வவுனியாவில் இன்றையதினம் 34 பாகை வெப்பம் நிலவுகின்றமை குறிப்பிடத்தக்கது.