கோர விபத்தில் சிக்கிய சிற்றூந்து!!

263

கோர விபத்து

குடா ஓய பிரதேசத்தில் சிற்றூந்து ஒன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 5 பேர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். விபத்தில் காயமடைந்தவர்களில் தேரர் ஒருவரும் அடங்குவதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

தனமல்வில பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றுக்கு சென்று திரும்பிக் கொண்டிருந்த போது இந்த விபத்து நேர்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நேற்று முன்தினம் மாலை குறித்த விபத்து இடம்பெற்றுள்ள நிலையில் விபத்தில் காயமடைந்தவர்கள் தனமல்வில மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் 4 பேர் மேலதிக சிகிச்சைக்காக ஹம்பாந்தொட மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.