இலங்கையை வரலாற்றில் தடம் பதிக்க வைத்த இலங்கை இளைஞன் : சோகமான பின்னணி குறித்து தகவல்!!

227

தரிந்து தயாரத்ன

அண்மையில் விண்வெளிக்கு அனுப்பப்பட்ட ராவணா-1 என்ற செய்மதியை தயாரித்த பொறியியலாளர்கள் இருவர் தொடர்பில் நாடாளுமன்றத்தில் தகவல் வெளியிடப்பட்டுள்ளது. அதற்கமைய நாடாளுமன்றத்தில் கருத்து வெளியிட்ட நாடாளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத்,

இந்த செய்மதியை அமைத்த தரிந்து தயாரத்ன என்ற இளைஞன் மிகவும் வறுமையில் பாதிக்கப்பட்டுள்ளார். அவர் வாழ்வதற்கு தகுதியான வீடு கூட இல்லை. தரிந்துவின் தந்தை சிறுநீரக நோயினால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளார்.

அமைச்சர் கிரிஎல்லவின் வீட்டை நிர்மாணிக்க 199 லட்சம் ரூபாய் செலவிட்டதாக நாடாளுமன்றத்தில் கூறப்பட்டது. எனினும் நாட்டிற்கு பெருமை தேடித்தந்த இளைஞனுக்கு எந்தவொரு உதவிகளும் செலவிடப்படவில்லை என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இலங்கையை சேர்ந்த இரு பொறியியலாளர்களால் ராவணா-1 தயாரிக்கப்பட்டது. இந்நிலையில் கடந்த திங்கட்கிழமை சர்வதேச விண்வெளி மையத்திலிருந்து விண்வெளி சுற்றுவட்டத்தில் ராவணா-1 செய்மதி சேர்க்கப்பட்டடிருந்தது. இலங்கையின் வரலாற்றில் முதன்முறையாக விண்வெளிக்கு செய்மதி அனுப்பப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.