வவுனியா மாவட்ட செயலகத்தில் வடமாகாண ஆளுனர் மக்களுடன் சந்திப்பு!!

252

ஆளுனர் மக்களுடன் சந்திப்பு

வடக்கு மக்களின் தேவைகளை உடனடியாக பூர்த்தி செய்ய வடமாகாண ஆளுநர் சுரேன் ராகவனால் மேற்கொள்ளப்பட்டு வரும் மக்கள் சந்திப்பு இன்று (19.06.2019) வவுனியாவில் இடம்பெற்றது.

வடக்கு ஆளுனர் சுரேன் ராகவன் தலைமையில் வடமாகாண அலுவலகங்களினால் தீர்க்கப்பட முடியாத பிரச்சனைகளிற்கு தீர்வினை பெற்றுக்கொள்வதற்காக ஒழுங்குபடுத்தப்பட்ட இம் மக்கள் சந்திப்பில் ஏராளமாக பொதுமக்கள் கலந்து கொண்டு வடமாகாண ஆளுனரை சந்தித்து தமது பிரச்சனை தொடர்பாக கலந்துரையாடியிருந்தனர்.

இதன் மூலமாக பொதுமக்கள் தமது பிரச்சினைக்கான தீர்வினை அல்லது தீர்வுக்கான இலகு வழிகளை பெற்றுச்செல்வதை அவதானிக்க கூடியதாக இருந்தது. வவுனியா மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற இச்சந்திப்பில் வடக்கு அமைச்சுக்களின் செயலாளர்கள் மற்றும் பிரதம செயலாளர், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.