வவுனியாவில் வடமாகாண ஆளுனர் எமக்கு சாதகமான பதிலை வழங்கினார் : வடமாகாண சுகாதார தொண்டர்கள்!!

280

வடமாகாண சுகாதார தொண்டர்கள்

வவுனியா மாவட்ட செயலகத்தில் வடமாகாண ஆளுனர் சுரேன் ராகவன் அவர்களுடன் இன்று (19.06.2019) வடமாகாண சுகாதார தொண்டர்கள் கலந்துரையாடிய பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே வடக்கு மாகாண சுகாதார தொண்டர்களின் தலைவி சிவகரன் சுகந்தி மேற்கண்டவாறு தெரிவித்தார். தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்,

ஆளுனருடன் இடம்பெற்ற சந்திப்பின்போது எமது சுகாதார தொண்டர்களில் 45 வயதினை தாண்டியவர் பலபேர் வடமாகாணத்தில் உள்ளனர். அந்த அடிப்படையில் ஆளுனர் அவர்கள் எமக்கு சாதகமான பதிலேயே எமக்கு வழங்கியுள்ளார். ஏற்கனவே சுகாதார தொண்டர்களாக பணியாற்றவர்கள் என்ற ஒர் காரணத்தினால் வயதெல்லையினை 50 வயது வரை நீடிக்கலாம் என தெரிவித்திருந்தார்.

கடந்த சில தினங்களுக்கு முன்னர் நேர்முகத்தேர்வு இடம்பெற்றது. அந்த நேர்முக தேர்வின் புள்ளி அடிப்படையில் தெரிவுகள் இடம்பெறும் என ஆளுனர் தெரிவித்திருந்தார். எனினும் இதில் சுகாதார தொண்டர்கள் யாராவது விடுபடுபவார்களாகவிருந்தால் சம்பந்தபட்டவர்களை தங்களுடன் கலந்துரையாடுமாறும் எமக்கு சாதகமான பதிலேயே வழங்கியிருந்தார். இறுதி முடிவுக்காக வடமாகாண சுகாதார தொண்டர்கள் அனைவரும் காத்திருக்கின்றோம் என தெரிவித்தார்.