வவுனியாவில் விபத்து : 4 மாணவர்கள் உட்பட ஐவர் படுகாயம்!!

439

வவுனியாவில் விபத்து

வவுனியாவில் இடம்பெற்ற விபத்தில் பாடசாலை மாணவர்கள் நான்கு பேர் உட்பட ஐவர் காயமடைந்த நிலையில் வவுனியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

வவுனியாவிலிருந்து பாடசாலை முடிவடைந்து மாணவர்களை ஏற்றி கோவில்குளம் நோக்கிச் சென்ற முச்சக்கரவண்டியும் சிதம்பரபுரத்திலிருந்து வவுனியா நோக்கிப் பயணித்த தனியார் பேருந்தும் கோவில்குளத்தில் நேருக்கு நேர் மோதிக்கொண்டதில் இந்த விபத்து சம்பவித்துள்ளது.

இதன்போது முச்சக்கரவண்டியில் பயணித்த நான்கு மாணவர்களும் 44 வயதுடைய முச்சக்கரவண்டி சாரதியும் காயமடைந்த நிலையில், வவுனியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் இந்த விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை வவுனியா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.