தயவு செய்து அவர்களை விட்டுவிடாதீர்கள் : வீடியோ வெளியிட்டு தற்கொலை செய்த பெண்!!

324

தற்கொலை செய்த பெண்..

கர்நாடக மாநிலத்தை சேர்ந்த பெண் ஒருவர் வீடியோ வெளியிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பெங்களூருவை சேர்ந்த சுப்பிரமணி – மஞ்சுளா (36) தம்பதியினர் தேவானந்தா பகுதியில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கி வருகின்றனர்.

கடத்த சில தினங்களுக்கு முன் அந்த வீட்டின் உரிமையாளரான சோமண்ணா, வீட்டை வேறு ஒருவருக்கு குத்தைகைக்கு விட திட்டமிட்டுள்ளதால், காலி செய்யுமாறு கூறியுள்ளார். அந்த பேச்சு வார்த்தை தோல்வியடைந்ததை அடுத்து, மஞ்சுளா குடும்பத்தாருக்கும் சோமண்ணா குடும்பத்தாருக்கும் அடிதடி சண்டை ஏற்பட்டுள்ளது. உடனே மஞ்சுளா பொலிஸ் நிலையம் சென்று புகார் கொடுத்துள்ளார்.

அங்கு இரு குடும்பத்தாரையும் அழைத்து வைத்து பொலிஸார் சமாதானம் செய்து அனுப்பியுள்ளனர். வீட்டிற்கு வந்த சில மணி நேரங்களில் மீண்டும் சண்டை துவங்கியுள்ளது. இதில் காயமடைந்த தன்னுடைய கணவரை மருத்துவமனையில் அனுமதித்த மஞ்சுளா, வீடு திரும்பியதும் தூக்குபோட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

இந்த சம்பவம் அறிந்து வந்த பொலிஸார், மஞ்சுளாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் மேற்கொள்ளப்பட்ட சோதனையில், தற்கொலைக்கு முன் அவர் பேசியிருக்கும் வீடியோ கைப்பற்றப்பட்டது.

அந்த வீடியோவில், என் மரணத்திற்கு பிந்து, கீதா மற்றும் சோமன்னா ஆகிய மூன்று பேர் காரணம். அவர்கள் என் வாழ்க்கையை நரகமாக்கியிருந்தார்கள். எனது தாலியை கூட பறித்து துன்புறுத்தினார்கள். நாங்கள் காவல் நிலையத்திற்குச் சென்றபோது, ​​பொலிஸாரின் முன் வைத்தே எங்களை தாக்கினார்கள்.

ஆனால் அவர்கள் ஒரு வார்த்தை கூட என்னவென்று கேட்கவில்லை. என் கணவரை மருத்துவமனையில் அனுமதித்துள்ளேன். இப்பொழுது நானும் தூக்கில் தொங்க போகிறேன். தயவு செய்து அவர்கள் மூன்றுபேரையும் விட்டுவிடாதீர்கள் என பதிவிட்டுள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்துள்ள பொலிஸார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.