சிறுவர்கள் மத்தியில் பரவும் வைரஸ் : விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!!

904


சின்னம்மை நோய்க்கு ஒப்பான வைரஸ் ஒன்று சிறுவர்கள் மத்தியில் பரவுவதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இந்த வைரஸ் தொற்று ஏற்படுகின்ற வேளைகளில் முதல் நாள் காய்ச்சல் ஏற்படுவதுடன், பின் சிறுவர்களின் உடலில் நீர்த்தன்மையான கொப்பளங்கள் மற்றும் சிவப்பு நிறத்திலான தழும்புகளும் ஏற்படும் என வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.



குறித்த அறிகுறிகள் மூன்று நாட்களுக்கு மேலாக நீடிக்கும் பட்சத்தில் விற்றமின்கள் மற்றும் மருந்துகள் வழங்கப்பட வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

வாய், கரம் மற்றும் கால்கள் போன்ற உடல் உறுப்புக்களில் இந்த நோய் தாக்கும் எனவும், இந்த வைரஸ் விரைவாக பரவும் என்பதால், இதனால் பாதிக்கப்பட்டுள்ள சிறார்களை பாடசாலைகள் அல்லது முன்பள்ளிகளுக்கு அனுப்ப வேண்டாம் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.