ஆதரவை விலக்கிக் கொள்ளும் நிலை ஏற்படும் : அரசாங்கத்திற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எச்சரிக்கை..!!

393

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் அதன் எம்.பி.யான ஹரிஸ் ஆகியோர் கல்முனை வடக்கு பிரதேச செயலகம் தரமுயர்த்தப்பட கூடாது என்பது தொடர்பில் தீவிரமாக செயற்பட்டு வருவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

நாடாளுமன்றத்தில் நேற்றைய தினம் உரையாற்றும் போது இந்த விடயத்தை நாடாளுமன்ற உறுப்பினர் சீனித்தம்பி யோகேஸ்வரன் குறிப்பிட்டுள்ளார். மேலும் கூறுகையில்,

இந்த அரசாங்கத்தையும், ஜனாதிபதி மற்றும் பிரதமரையும் ஆட்சிக்கு கொண்டு வந்ததில் பெரும் பங்களிப்பு தமிழர்களுக்கு உள்ளது. அந்த நன்றிக்கடன் அரசாங்கத்துக்கு இருக்கின்றதா? என நாம் கேட்கின்றோம்.

கல்முனை வடக்கு தமிழ் பிரதேச செயலகத்தை, அரசாங்கம் உடனடியாக தரமுயர்த்தாவிட்டால், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அரசாங்கத்திற்கு வழங்கியுள்ள ஆதரவை விலக்கி கொள்ளும் நிலை ஏற்படும் என எச்சரிக்கை விடுத்துள்ளார்.

அத்துடன், தமிழ் மக்களின் விருப்பத்துக்கு மாறாகவே அரசாங்கம் செயற்பட்டு வருகிறது. எனினும் அரசாங்கத்துக்கு தொடர்ந்தும் நாம் ஆதரவளித்து வருகின்றோம். இனியும் எமது மக்களை நாம் சமாதானப்படுத்த முடியாது என குறிப்பிட்டுள்ளார்.