இன்று நள்ளிரவு முதல் இலங்கை மக்கள் எதிர்நோக்கவுள்ள பிரச்சினை!!

436

மக்கள் எதிர்நோக்கவுள்ள பிரச்சினை

தொடருந்து தொழிற்சங்கங்கள் இன்று நள்ளிரவு முதல் 48 மணித்தியாலங்கள் பணிப்புறக்கணிப்பில் ஈடுபடுவதற்கு தீர்மானித்துள்ளதாக தொடருந்து தொழிற்சங்க ஒன்றியம் அறிவித்துள்ளது. நிதியமைச்சர் மங்கள சமரவீரவுடன் இன்று இடம்பெற்ற கலந்துரையாடல் தோல்வியில் முடிவடைந்ததன் காரணமாகவே இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அந்த ஒன்றியம் தெரிவித்துள்ளது.

இந்த வேலைநிறுத்த போராட்டமானது சம்பள பிரச்சினை உள்ளிட்ட பல விடயங்களை முன்வைத்து மேற்கொள்ளப்படவுள்ளதாகவும், சில கோரிக்கைகளை முன்னிறுத்தி தொடருந்து தொழிற்சங்க ஒன்றியம் நேற்று நள்ளிரவு முதல் பணிப்புறக்கணிப்பில் ஈடுபடுவதற்கு இதற்கு முன்னர் தீர்மானித்திருந்தது.

எனினும் நிதியமைச்சருடன் இடம்பெற்ற கலந்துரையாடல் வாய்ப்பு ஏற்படுத்தி கொடுக்கவுள்ளதாக போக்குவரத்து அமைச்சர் வழங்கிய வாக்குறுதிக்கு அமைய குறித்த பணிப்புறக்கணிப்பை தற்காலிகமாக கைவிடுவதற்கு தொடருந்து தொழிற்சங்க ஒன்றியம் நேற்று தீர்மானித்திருந்தது. எனினும் குறித்த கலந்துரையாடலில் இணக்கப்பாடு எதுவும் ஏற்படாத நிலையில் மீண்டும் பணிப்புறக்கணிப்பை மேற்கொள்ள தொடருந்து தொழிற்சங்கம் ஒன்றியம் தீர்மானித்துள்ளது.