விழிப்புனர்வு பேரணி
மதங்களுக்கிடையே நல்லினக்கத்தினை ஏற்படுத்தும் முகமாக விழிப்புனர்வு கருத்தரங்கும் விழிப்புணர்வு சுவரொட்டிகள் ஒட்டும் நிகழ்வும் வவுனியாவில் நேற்று இடம்பெற்றிருந்தது.
தேசிய சமாதான பேரவை மற்றும் கிராம அபிவிருத்தி நிறுவனத்தின் ஒழுங்கமைப்பில் வவுனியா பிரதேச சர்வமதக்குழுவின் அனுசரனையுடன் மதங்களுக்கிடையே நல்லினக்கத்தினை ஏற்படுத்தும் வகையில் விழிப்புணர்வு கருத்தரங்கு வவுனியா இரண்டாம் குறுக்குத்தெரு வீதியில் அமைந்துள்ள விருந்தினர் விடுதியில் நேற்று (20.06.2019) காலை 10.00 மணி தொடக்கம் 11.00 மணி வரை நடைபெற்றது.
இவ் விழிப்புணர்வு கருத்தரங்கின் பின்னர் குறித்த விடுதியிலிருந்து இரண்டாம் குறுக்குத்தெரு வீதியூடாக பழைய பேரூந்து நிலையம் வரை பதாதைகளை கையில் ஏந்திய வண்ணம் அணைவரும் பேரணியாக சென்றனர்.
அதன் பின்னர் பழைய பேரூந்து நிலையத்திற்கு அருகே விழிப்புணர்வு சுவரொட்டிகளை சர்வமதத்தலைவர்களுடன் இணைந்து பேரணியில் கலந்து கொண்டிருந்த அனைவரும் ஒட்டினார்கள்.
தேசிய சமாதான பேரவையின் வவுனியா மாவட்ட இணைப்பாளர் யு.எம் உவைஸ் தலமையில் இடம்பெற்ற இச் செயற்றிடத்தில் சமூக பொலிஸ் பிரிவு பொலிஸ் பரிசோதகர் சி.எம்.அரவிந்த, பொலிஸார், கிராம சேவையாளர்கள், தனியார் மற்றும் அரச திணைக்களங்களின் உத்தியோகத்தர்கள், ஊழியர்கள், இளைஞர்கள், மதத்தலைவர்கள், பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள், பொதுமக்கள் என பலரும் பங்கு பற்றியிருந்தனர்.