வவுனியாவில் காணாமல் போனவர் சடலமாக மீட்பு!!

458

காணாமல் போனவர்

வவுனியா பண்டாரிக்குளத்தில் வசித்து வந்த 74 வயதுடைய வயோதிபர் ஒருவர் கடந்த 08.06.2019 முதல் காணாமல் போயிருந்தார்.

இந்நிலையில் இன்று (22.06.2019) காலை புளியங்குளம், பெரியமடு காட்டுப்பகுதியிலிருந்து அவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக புளியங்குளம் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

வவனியா பண்டாரிக்குளம் பகுதியில் வசித்து வந்த இளஞ்சிங்கம் தேவராசா 74 வயதுடைய வயோதிபர் கடந்த 08.06.2019 முதல் காணாமல் போயுள்ளதாக அவரது உறவினர்கள் வவுனியா பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு 10.06.2019 அன்று மேற்கொள்ளப்பட்டது.

இந்நிலையில், அவரைபத்திரிகையூடாக விளம்பரப்படுத்தி தேடுதல் மேற்கொள்ளப்பட்டு வந்த நிலையில் இன்று காலை அவரது சொந்த இடமான புளியங்குளம் பெரிமடு காட்டுப்பகுதியிலிருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார். குறித்த சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.