வவுனியாவிற்குச் சென்ற அண்ணன், தம்பி இருவரையும் காணவில்லை!!

742

அண்ணன், தம்பி இருவரையும் காணவில்லை

நெடுங்கேணியிலிருந்து வவுனியாவிற்குச் சென்ற இருவரைக் காணவில்லை என்று வவுனியா பொலிஸ் நிலையத்தில் தந்தை ஒருவர் முறைப்பாடு ஒன்றினை பதிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 20.06.2019 வியாழக்கிழமை அன்றைய தினம் வவுனியா வடக்கு, நெடுங்கேணி நயினாமடு பகுதியிலிருந்து பேருந்தில் வவுனியா நீதிமன்றத்தில் இடம்பெறும் வழக்கு விசாரணை ஒன்றிற்குச் சென்ற இருபிள்ளைகளே காணாமல் போயுள்ளதாக தந்தை ஒருவர் வவுனியா பொலிஸ் நிலையத்தில் இன்றைய தினம் முறைப்பாட்டினை பதிவு செய்துள்ளார்.

விஜயசுந்தர் தர்சன் வயது 19, விஜயசுந்தர் நிதர்சன் வயது 16 ஆகிய இருவருமே காணாமல் போயுள்ளதாகவும் இவர்களை கண்டுபிடித்துத்தருமாறும் தந்தை பொலிஸ் நிலையத்தில் வழங்கிய முறைப்பாட்டில் தெரிவித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

காணாமல் போயுள்ள இருவர்களை பற்றிய தகவல்களை அறிந்திருப்பவர்கள் 0775415912, 0775261259 ஆகிய தொலைபேசி இலகத்திற்கு அறியத்தருமாறு மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.