வவுனியாவில் சந்தைக்கு முன்பாக பயிர் சிகிச்சை முகாம்

335


வவுனியா ஹொ ரவப்பொத்தானை வீதியில் அமைந்து சந்தைக்கு முன்பாக நேற்று (21.06.2019) அதிகாலை 5 மணி தொடக்கம் காலை 7 மணி வரை பயிர் சிகிச்சை முகாம் இடம்பெற்றது.

வவுனியா பிரதி மாகாண விவசாயப் பணிப்பாளர் அலுவலகத்தின் ஏற்பாட்டில் வாரத்தின் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் விவசாயிகளுக்கு இலகுவான முறையில் சேவையினை வழங்கும் நோக்கில் வவுனியா பொதுச்சந்தைக்கு முன்பாக பயிர்ச்செய்கை முகாம் இடம்பெற்று வருகின்றது.



அந்த வகையில் இப் பயிர் சிகிச்சை முகாம் இடம்பெற்றிருந்ததுடன் பல விவசாயிகள் தங்களது சந்தேகங்கள் மற்றும் பயிர்களுக்கான தீர்வினை பயிர் சிகிச்சை முகாமில் பெற்று பயனடைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.