வவுனியா செட்டிகுளத்தில் மனைவியை வெங்காய வெடி வைத்து கொலை செய்த குற்றச்சாட்டில் தேடப்பட்ட கணவன் கைது!!

291

வவுனியா, செட்டிகுளம் பகுதியில் மனைவியை வெங்காய வெடியை வெடிக்க வைத்து கொலை செய்த நிலையில் தலைமறைவாக இருந்த கணவன் இன்று செட்டிகுளம் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

செட்டிகுளம், துடரிக்குளம் பகுதியில் கடந்த வெள்ளிக்கிழமை இரவு 4 பிள்ளைகளின் தாயாரான 40 வயது பெண் ஒருவர் வெங்காய வெடியை முகத்தில் வெடிக்க வைத்து கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டிருந்தார்.

குறித்த கொலைச் சம்பவம் தொடர்பில் செட்டிகுளம் பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்திருந்தனர். இச் சம்பவம் தொடர்பில் குறித்த பெண்ணின் கணவன் தலைமைவாகியிருந்த நிலையில் பொலிசாரால் தேடப்பட்டு வந்தார்.

இந்நிலையில் இன்று செட்டிகுளம் புகையிரத நிலையத்திற்கு முன்னால் உள்ள ஆலயத்தின் பின்புறமாக உள்ள காட்டுப்பகுதிக்குள் மறைந்திருந்த நிலையில் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த நபரின் கையிலும் வெங்காய வெடி காரணமாக காயம் ஏற்பட்டுள்ள நிலையில் கைது செய்யப்பட்ட நிலையில், குறித்த நபர் பொலிஸ் பாதுகாப்புடன் செட்டிகுளம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

குறித்த பெண்ணின் கணவரான 43 வயதுடைய து.ரவிச்சந்திரன் என்பரே கைதுது செய்யப்பட்டுள்ளார். இது தொடர்பான மேலதிக விசாரணைகளை செட்டிகுளம் பொலிசார் முன்னெடுத்துள்ளனர்.