வவுனியாவில் பிரபா கணேசனின் மக்கள் சந்திப்பும் மாணவர்களிற்கான உதவி வழங்கலும்!!

355

முன்னாள் பிரதி அமைச்சரும் ஜனநாயக மக்கள் காங்கிஸின் தலைவருமான பிரபா கணேசனின் மக்கள் சந்திப்பும், 300 மாணவர்களிற்கான கற்றல் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வும் நேற்று முன்தினம் (22.06) மாலை வவுனியா பூந்தோட்டம் லயன்ஸ் விளையாட்டுக் கழக மைதானத்தில் இடம்பெற்றது.

ஜனநாயக மக்கள் காங்கிஸின் வவுனியா மாவட்ட செயலாளர் நாதன் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் கட்சியின் முக்கியஸ்தர்கள், பொதுமக்கள், பாடசாலை மாணவர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.