வவுனியாவில் சதுரங்க போட்டி நிகழ்வு!!

280


வவுனியாவில் திறந்த சதுரங்க விளையாட்டு போட்டி நேற்று (23.06.2019) வைரவப்புளியங்குளம் கிராம உத்தியோகத்தர் தலைமையில் நடைபெற்றது. பிரதம விருந்தினராக வெண்கலச் செட்டிக்குளம் பிரதேச செயலாளர் கெ.சிவகரன் கலந்துகொண்டிருந்தார்.

வவுனியா மாவட்ட சதுரங்க சம்மேளன செயலாளர் பிரபாகரன் ஜானுஜன் தலைமையில் நடைபெற்ற சதுரங்க விளையாட்டு நிகழ்வில் இளைஞர் யுவதிகள் மாணவர்கள் என பலரும் கலந்துகொண்டிருந்தனர்.



இந்நிகழ்வில் வவுனியா மாவட்ட உதவி செயலாளர் நா.கமலதாசன், வைரவப்புளியங்குளம் கிராம உத்தியோகத்தர் க.விஜயகுமார், ஐ.சி.சி. கம்பஸ் இயக்குனர் எஸ்.சந்திரகுமார், வர்த்தகர் ஜீவகரன், மாவட்ட செயலகத்தின் உத்தியோகத்தர் ஜெ.ஜெயசீலன் ஆகியோர் விருந்தினராக கலந்துகொண்டிருந்தனர்.