வவுனியாவில் புளொட் அமைப்பின் பேராளர் மாநாடு!!

374

வவுனியாவில் தமிழீழ விடுதலை கழகத்தின் அரசியல் பிரிவான ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் 9 வது பேராளர் மாநாடு நேற்று (23.06.2019) ‘புளொட்’ அமைப்பின் தலைவரும் யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான தர்மலிங்கம் சித்தாத்தன் தலைமையில் இடம்பெற்றது.

வவுனியா கோவில்குளம் சந்திக்கு அருகாமையில் அமைந்துள்ள ஆதி திருமண மண்டபத்தில் நடைபெற்ற பேராளர் மாநாட்டில் வடக்கு கிழக்கு பகுதியை சேர்ந்த மாவட்ட பொறுப்பாளர்கள், மாகாணசபை உறுப்பினர்கள், நகரசபை உறுப்பினர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.

புலம்பெயர்ந்த நிலையில் செயற்பட்டு வந்த தமிழீழ விடுதலை கழகத்தின் உறுப்பினர்களும் இப்பேராளர் மாநாட்டில் கலந்துகொண்டனர்.

தர்மலிங்கம் சித்தாத்தன் மங்கள விளக்கேற்ற மரணித்த தோழர்களுக்கான மௌன அஞ்சலியுடன் போராளர் மாநாடானது ஆரம்பமாகியிருந்தது.

‘புளொட்’ அமைப்பின் 9வது பொதுச்சபை கூட்டமானது நேற்று முன்தினம் நடைபெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.