வவுனியா மேல் நீதிமன்றத்தில் இராணுவத்தினரை கொலை செய்த குற்றச்சாட்டில் கைதிகள் மூவர் விசாரணைக்கு!!

316

கைதிகள் மூவர் விசாரணைக்கு

இராணுவத்தினரை கொலை செய்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டிருந்த அரசியல் கைதிகள் மூவர் வவுனியா மேல் நீதிமன்றத்தில் விசாரணைக்கு இன்று காலை அழைத்து வரப்பட்டுள்ளனர்.

இராணுவத்தினரை கொலை செய்து எரியூட்டிய குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டு அனுராதபுரம் சிறையில் மூன்று முன்னாள் போராளிகள் தடுத்து வைக்கப்பட்டிருந்தனர்.

இக்குற்றச்சாட்டு தொடர்பான வழக்குகள் வவுனியா மேல்நீதிமன்றத்தில் இடம்பெற்று வந்த நிலையில் இன்று குறித்த வழக்கிற்காக குற்றம் சாட்டப்பட்ட மூவரையும் பலத்த பாதுகாப்புடன் பொலிஸாரினால் வவுனியா மேல்நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்டுள்ளனர்.