வவுனியாவில் தேசிய போதையற்ற தேசம் வேலைத்திட்ட ஆரம்ப நிகழ்வுகள்!!

708


போதையற்ற தேசம் வேலைத்திட்டம்..

 



ஜனாதிபதி செயலகத்தின் நிகழ்ச்சித்திட்டத்தில் ஜீன் 23 முதல் மாவட்டம் தோறும் போதையற்ற தேசிய வார வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.



இதனடிப்படையில் இன்று காலை வவுனியா மாவட்ட செயலகத்தில் நான் போதையை எதிர்க்கின்றேன் வேலைத்திட்டம் உதவி அரசாங்க அதிபர் கமலதாஸ் தலைமையில் ஆரம்பித்து வைக்கப்பட்டு உத்தியோகத்தர்களுக்கு ஒரே நேரத்தில் எதிர்ப்புப்பட்டி அணிவிக்கும் நிகழ்வுகள் இடம்பெற்றது. மாவட்ட செயலக திணைக்கள அதிகாரிகள். உத்தியோகத்தர்கள் எனப்பலரும் கலந்துகொண்டனர்.




ஜனாதிபதி செயலகத்தினால் ஜீன் மாதம் 23ஆம் திகதி முதல் ஆரம்பிக்கப்பட்ட போதையற்ற தேசம் வேலைத்திட்டத்தில் இவ்வாரத்தில் வவுனியா மாவட்டத்தில் 14 விழிப்புணர்வு பிரச்சாரங்களும் நாளை 50 வாகனப்பேரணி, அனைத்துத் திணைக்களங்களைச் சேர்ந்த போதைப் பொருள் எதிர்ப்பு வாகனப் பேரணி வவுனியாவிலிருந்து கிளிநொச்சி நகரை நோக்கி செல்லவுள்ளது.


நானை மறுதினம் புதன்கிழமை மாவட்ட செயலகத்தில் அரசாங்க அதிபர் தலைமையில் போதை ஒழிப்பு எதிர்ப்பு வாசகங்களைத் தாங்கிய 100 பலூன்கள் வானில் பறக்கவிடப்படும் நிகழ்வு காலை 8.30மணிக்கு ஆரம்பமாகவுள்ளதாகவும் அனைத்துத்திணைக்கள உத்தியோகத்தினரையும் தவறாது கலந்துகொள்ளுமாறு மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.