காதலனை நம்பி திருமணம் செய்த இளம் பெண் : அதன் பின் 30 நாளில் நடந்த கொடுமை!!

588

தமிழகத்தில் திருமணமான 30 நாளில் மனைவியை கொலை செய்துவிட்டு தப்பி ஓடிய கணவனை பொலிசார் தேடி வருகின்றனர். திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலத்தை அடுத்த குச்சிபாளையத்தை சேர்ந்தவர் சிவக்குமார். 25 வயதாகும் இவரும் குண்சுந்தரி என்ற 23 வயது பெண்ணும் காதலித்து வந்துள்ளனர்.

இவர்களின் காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததால், அவர்களின் எதிர்ப்பையும் மீறி இருவரும் கடந்த மாதம் திருமணம் செய்து கொண்டனர். திருமணத்திற்கு பின் இருவரும் தஞ்சை மாவட்டம் ஒரத்தநாட்டை அடுத்த நெய்வாசல் சமத்துவபுரத்தில் வாடகைக்கு வீடு எடுத்து அங்கு வசித்து வந்தனர்.

இந்த நிலையில் குடும்ப பிரச்சினை தொடர்பாக கணவன்- மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. நேற்றும் அவர்களுக்கிடையே தகராறு ஏற்பட்டது.

இதைத்தொடர்ந்து குணசுந்தரி வீட்டில் தூக்கில் பிணமாக தொங்கினார். இதனை கண்ட அக்கம் பக்கத்தினர் அதிர்ச்சி அடைந்தனர். இதுபற்றி ஒரத்தநாடு பொலிசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

அதன்பேரில் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற பொலிசார், குணசுந்தரி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஒரத்தநாடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து தலை மறைவான சிவக்குமாரை தேடி வருகிறார்கள்.

குணசுந்தரி சாவில் மர்மம் நிலவுவதால் அவரை கொலை செய்து தூக்கில் தொங்க விட்டாரா? அல்லது தற்கொலைக்கு தூண்டினாரா? என்று பொலிசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

திருமணமான ஒரு மாதத்துக்குள் புதுப்பெண் மர்மமான முறையில் இறந்ததால் ஆர்.டி.ஓ. சுரேசும் மேல் விசாரணை மேற்கொண்டு வருகிறார்.