ஐந்து நாட்கள் தனியறையில் 16 வயது சிறுமிக்கு நடந்த கொடூரம்!!

243

சிறுமிக்கு நடந்த கொடூரம்

இந்தியாவின் ஆந்திர மாநிலத்தில் 16 வயது சிறுமி நாள் கணக்கில் ஒரு கும்பலால் துஷ்பிரயோகம் செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அமராவதி நகரை சேர்ந்த 16 வயது சிறுமி கடந்த 17ஆம் திகதி பேருந்து நிலையத்தில் இளைஞர் ஒருவரை சந்தித்துள்ளார். பின்னர் இருவரும் நட்பானார்கள், இதையடுத்து தான் தங்கியிருக்கும் அறைக்கு சிறுமியை அந்த இளைஞர் அழைத்து சென்றார்.

அங்கு இளைஞரின் ஐந்து நண்பர்கள் இருந்தனர். ஆறு பேரும் சேர்ந்து அந்த சிறுமியை ஐந்து நாட்கள் துஷ்பிரயோகம் செய்தனர். பின்னர் சிறுமி அங்கிருந்து தப்பி பேருந்து நிலையத்துக்கு சென்றார், அங்கு காவல் துறை அதிகாரி ஒருவர் இருந்த நிலையில் சிறுமியை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தார்.

சிறுமியின் புகாரை தொடர்ந்து ஆறு பேரையும் பொலிசார் கைது செய்தனர். இதனிடையில் இச்சம்பவத்துக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள மாநில உள்துறை அமைச்சர் சுச்சாரித்தா, குற்றவாளிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்துள்ளார்