வவுனியாவை போதையற்ற தேசமாக மாற்ற பறக்கவிடப்பட்ட பலூன்கள்!!

541


பறக்கவிடப்பட்ட பலூன்கள்



போதையற்ற தேசமாக நம்நாட்டினை ஆக்கவேண்டுமென்ற ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவின் தூரநோக்கின் அடிப்படையில் தேசிய ரீதியில் முன்னெடுக்கப்படும் தேசிய போதைப்பொருள் தடுப்பு தினத்தின் முன்றாவது நாளாகிய இன்று போதைத்தடுப்பு வாசகங்களைத் தாங்கிய பலூன்கள் பறக்கவிடும் நிகழ்வு வவுனியா மாவட்ட செயலகத்தில் (26.06) காலை 9.30 மணியளவில் வவுனியா மாவட்ட செயலகத்தில் ஆரம்பமானது.



வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர் ஐ.எம். ஹனீப இந்நிகழ்வை ஆரம்பித்து வைத்தார். ஜனாதிபதி செயலகம் மற்றும் ஆளுநர் அலுவலகத்தின் ஆலோசனைக்கமைய வவுனியா மாவட்ட செயலகத்தின் ஏற்பாட்டில் ஆரம்பமான இப் போதைப்பொருள் ஒழிப்பிற்கான நடவடிக்கைகளில் ஒன்றாக இந்நிகழ்வு முன்னெடுக்கப்பட்டது.




இந்நிகழ்வில் மாவட்ட செயலகத்தின் கீழுள்ள அனைத்து திணைக்களங்களின் உத்தியோகத்தர்களும் கலந்துகொண்டனர்.