வவுனியாவில் போதைக்கு எதிராக வீதியில் திரண்ட மாணவர்கள்!!

683

வீதியில் திரண்ட மாணவர்கள்

போதைக்கு எதிராக வவுனியா முஸ்லீம் மகாவித்தியாலய மாணவர்கள் கவனயீர்ப்பு போராட்டம் மற்றும் ஊர்வலத்திலும் ஈடுபட்டனர்.

இன்று (26.06.2019) காலை 7.30 மணிக்கு பாடசாலைக்கு முன்பாக வீதியோராத்தில் ஒன்றுகூடிய மாணவர்கள் போதைப்பொருள் பாவனை மற்றும் அதற்கு எதிரான சுலோகங்களை தாங்கியவாறு கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனையடுத்து பட்டானிச்சூர் சந்திவரை ஊர்வலமாக சென்ற மாணவர்கள் மீண்டும் பாடசாலையை வந்தடைந்தனர்.

இந் நிலையில் குறித்த கவனயீர்ப்பு போராட்டத்தில் பாடசாலை அதிபர், ஆசிரியர்கள், இஸ்லாமிய மதகுரு, பொலிஸ் உத்தியோகத்தர் என பலரும் கலந்துகொண்டிருந்தனர்.