இறந்த நடிகையின் ஆசையை நிறைவேற்றிய கடவுள் : நெஞ்சை உருக்கும் உண்மை சம்பவம்!!

748


நெஞ்சை உருக்கும் உண்மை சம்பவம்



பிரபல திரைப்பட நடிகையான விஜய நிர்மலா தமிழகத்தில் கடந்த 1946-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 20-ஆம் தேதி பிறந்தார். அதன் பின் தன்னுடைய 7 வயதில் திரைத்துரையில் அடியெடுத்துவைத்த விஜய் நிர்மலா தமிழ், தெலுங்கு மற்றும் மலையாளம் ஆகிய 3 மொழிகளில் 200-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.



அதுமட்டுமின்றி இவர் தெலுங்கு, தமிழ் உள்ளிட்ட மொழிகளில் 44 திரைப்படங்களை இயக்கியுள்ளார். ஒரு பெண் இயக்குநர் அதிகபட்சமாக 44 திரைப்படங்களை இயக்கி கின்னஸ் சாதனை படைத்தார். இதைத் தொடர்ந்து தெலுங்கு நடிகர் கிருஷ்ணாவை திருமணம் செய்தார்.




இந்நிலையில் கடந்த சில மாதங்களாக உடல்நலக் குறைவால் அவதிப்பட்டு வந்த இவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். திடீரென உடல்நிலை மோசமானததால், சிகிச்சைக்காக ஹைதராபாத் நகரில் கச்சிபோலி பகுதியில் உள்ள கான்டினென்டல் மருத்துமனையில் அனுமதிக்கப்பட்ட இவர், சிகிச்சை பலனின்றி இன்று தன்னுடைய 73 வயதில் இறந்தார்.


விஜய நிர்மலா தீவிரமான சாய்பாபா பக்தையாம். இதனால் அவர் கோவிலுக்கு வரும் தனக்கு தெரிந்த பக்தர்களிடம், நான் இறப்பது முக்கியமல்ல. தான் இறந்தால் வியாழக்கிழமை தான் இறக்க வேண்டும் என கூறி வந்துள்ளார். அதன்படியே மரணத்தில் அவரின் ஆசையை ஆண்டவன் நிறைவேற்றிவிற்றார் என்று பக்தர்கள் உருக்கமாக கூறியுள்ளனர்.