பிக்பாஸ் வீட்டில் கண்ணீர் விட்டு கதறி அழுத இலங்கைப் பெண் லொஸ்லியா : காரணம் இதுதான்!!

659


லொஸ்லியா



பிக்பாஸ் மூன்றாவது சீசனில் இந்த வாரம் முழுவதும் போட்டியாளர்கள் அனைவரும் தாங்கள் வாழ்க்கையில் நடந்த சோகத்தை கண்ணீருடன் தெரிவித்துவருகின்றனர்.



இன்று இலங்கை பெண் லொஸ்லியா தன் கதையை பேசியுள்ளார். தன்னுடைய அக்கா குடும்ப சண்டையில் விபரீத முடிவு எடுத்ததுடன் தற்போது உயிருடன் இல்லாதது பற்றி கண்ணீருடன் பேசியுள்ளார்.




மேலும் தன்னுடைய அப்பா கனடாவில் இருபதாகவும், அவரை பார்த்தே 10 வருடம் ஆகிறது என அவர் கண்ணீருடன் பேசியுள்ளார்.


பிக்பாஸ் லொஸ்லியாவை வைத்து செய்யப்படும் மிகப் பெரிய தந்திரம்? : பிக்பாஸ் மூன்றாவது சீசனில் பல போட்டியாளர்கள் கலந்து கொண்டிருந்தாலும் குறுகிய நாட்களிலேயே அதிக ரசிகர்களை ஈர்த்துள்ளார் லொஸ்லியா.

அவர் அழகாக இருக்கிறார் அதனால் அதிக ரசிகர்கள் இருக்கிறார்கள் என்பது ஒரு பக்கம். ஆனால் பிக்பாஸ் தொடங்கிய அந்த நாளிலேயே லோஸ்லியாவுக்கு டுவிட்டரிலும், பேஸ்புக்கிலும் ஆர்மி கிளம்பியது எப்படி சாத்தியமானது?


இதற்கு பின்னணியில் பிக்பாஸ் நிகழ்ச்சியை நடத்தும் தொலைக்காட்சி நிறுவனவே இருக்கலாம் என்கிறார்கள் நெட்டிசன்கள்.

அதாவது லோஸ்லியா இலங்கையை பூர்வீகமாக கொண்டவர். அவருக்கு இந்தியளவில் தானாக ரசிகர்கள் சேர்ந்தாலும், வெளிநாட்டில் ரசிகர்களை சேர வைத்து நிகழ்ச்சியை பிரபலப்படுத்த தொலைக்காட்சி நிறுவனவே பிக்பாஸ் ஆர்மியை சமூகவலைதளத்தில் தொடங்கி வைத்திருக்கலாம் என நெட்டிசன்கள் கணக்கு போடுகிறார்கள்.

நெட்டிசன்களின் கணக்கு உண்மையோ பொய்யோ லோஸ்லியாவுக்கு ரசிகர்கள் பட்டாளம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது என்பது மறுக்கமுடியாத உண்மை.