வவுனியாவில் போதை ஒழிப்புப் பேரணி!!

766

வவுனியாவில் இன்று காலை கண்டி வீதியிலுள்ள பௌத்த விகாரையிலிருந்து ஆரம்பமான போதை ஒழிப்புப் பேரணி கண்டி பிரதான வீதி வழியாக மணிக்கூட்டு வீதி வழியாக திரும்பவும் பௌத்த விகாரையைச் சென்றடைந்தது.

சிவில் பாதுகாப்புப் படைப்பிரிவின் ஏற்பாட்டில் இடம்பெற்ற போதை ஒழிப்புப் பேரணியில் சிவில் பாதுகாப்புப் படையினர், பொலிசார், பாடசாலை மாணவர்கள், ஆசிரியர்கள் என 500ற்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு குடி குடியைக் கெடுக்கும், பாலகரை குடி என்கின்ற பாதாளத்தில் தள்ளாதே, போதை அற்ற தேசத்தில் வாழ்வோம்,

போதைப்பொருளற்ற நாட்டைக் கட்டியெழுப்புவோம், மதுவிலிருந்து வாலிபரைப் பாதுகாப்போம் போன்ற போதை எதிர்ப்பு பதாதைகளைத் தாங்கியவாறு பேரணியில் கலந்துகொண்டனர்.

ஜனாதிபதி செயலகத்தின் ஏற்பாட்டில் நாடாளாவிய ரீதியில் மேற்கொள்ளப்பட்டு வரும் போதை ஒழிப்பு வேலைத்திட்டத்தின் ஓர் அங்கமாக இப் போதை ஒழிப்புப் பேரணி இடம்பெற்றது.