வவுனியா பிரதேச செயலகத்தில் மொழியின் தேவை குறித்து கருத்தமர்வு!!

561

அரசகரும மொழி கொள்கையை வினைத்திறனான முறையில் நடைமுறைப்படுத்தும் நோக்கில் அரசகரும மொழி கொள்கையை நடைமுறைப்படுத்தும் வாரம் தேசிய ஒருமைப்பாடு, அரச கரும மொழிகள், சமூக முன்னேற்றம் மற்றும் இந்து சமய அலுவல்கள் அமைச்சினால் பொதுமக்கள்தினம் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

அதன் அடிப்படையில் வவுனியா பிரதேச செயலாளர் கா.உதயராஜா நெறியாள்கையின் கீழ் வவுனியா பிரதேச செயலகத்தில் தேசிய மொழிகள் தின விழிப்புணர்வு செயலமர்வு நேற்று (03.07) இடம்பெற்றது.

செயலமர்வில் மொழி உரிமை மீறல், மொழியின் தேவை, மொழி ஏன் அவசியம் மொழி சம்பந்தமான விளக்கங்கள் போன்ற பல்வேறு விடயங்கள் தொடர்பாக விளக்கமளிக்கப்பட்டது.

இவ் விழிப்புணர்வு செயலமர்வில் உதவி பிரதேச செயலாளர் பிரியதர்சினி, விமானப்படையினர், பிரதேசசெயலக உத்தியோகத்தர்கள், கிராமசேவையாளர்கள், ஊழியர்கள், பொதுமக்கள், சகவாழ்வு சங்க உறுப்பினர்கள், அரச உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.