வவுனியாவைச் சேர்ந்த 7 மாணவர்கள் வடமாகாண மெய்வல்லுனர் போட்டியில் பதக்கம் வென்று சாதனை!!

690

வடமாகாண மெய்வல்லுனர் போட்டி

யாழ்ப்பாணம் துரையப்பா விளையாட்டரங்கில் நடைபெற்ற 2019 ஆம் ஆண்டுக்கான வடமாகாண மெய்வல்லுனர் போட்டியில் வவுனியாவை பிரதிபலித்து கலந்துகொண்ட மாணவர்கள் ஏழு பதக்கங்களை சுவீகரித்துள்ளனர்.

வவுனியா காமினி மகாவித்தியாலயத்தில் கல்வி பயிலும் மாணவர்களான கெ.நிசோபன் 1500 மீற்றர் ஓட்டத்தில் தங்கப்பதக்கத்தையும், 5000 மீற்றர் ஓட்டத்தில் வெள்ளிப் பதக்கத்தையும், கெ.நிசாந்தன் 1500 மீற்றரில் வெள்ளி பதக்கத்தையும் சுவீகரித்திருந்தனர்.

வவுனியா அகில இலங்கை திருச்சபை தமிழ் கலவன் பாடசாலை மாணவியான எஸ்.கேமபிரியா 5000 மீற்றர் மற்றும் 1500 மீற்றரில் தங்கப்பதக்கத்தையும், 800 மீற்றர் ஓட்டப்பந்தயத்தில் வெள்ளிப்பதக்கத்தையும்,

ஸ்ரீராமாபுரம் திருஞானசம்பந்தர் பாடசாலை மாணவியான ஜெ.தனுசியா 800 மீற்றர் ஓட்டப்பந்தயத்தில் வெள்ளிப்பதக்கத்தையும் பெற்று வவுனியா மாவட்டத்திற்கும், பயிற்சியாளருக்கும் அவர்கள் கல்வி கற்கும் பாடசாலைக்கும் பெருமை சேர்த்துள்ளனர்.