வவுனியாவில் வியாபார நிலையத்தினுள் புகுந்து இளைஞர் குழு அட்ட காசம் : இருவர் வைத்திய சாலையில்!!

695


இளைஞர் குழு அட்டகாசம்



வவுனியா புகையிரத நிலைய வீதியில் அமைந்துள்ள வியாபார நிலையத்தினுள் இளைஞர் குழுவொன்று புகுந்து தாக் குதல் மேற்கொண்டதில் இருவர் படுகாய மடைந்த நிலையில் வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இன்று (10.07.2019) புதன்கிழமை காலை 9.30 மணியளவில் இடம்பெற்ற இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,



குறித்த வர்த்தக நிலையத்திற்கு முன்பான பட்டா ரக வாகனத்தில் நபர் ஒருவர் பழங்கள் விற்பனை செய்து வந்துள்ளார். இதனையடுத்து வர்த்தக நிலையத்தின் உரிமையாளர் பழங்களை விற்பனை செய்யும் நபரிடம் சென்று இவ்விடத்தில் வாகனத்தில் வியாபாரம் மேற்கொள்ளுவதினால் தமக்கு வியாபாரம் மேற்கொள்ள இடையூராக அமைந்துள்ளதாக தெரிவித்துள்ளார்.




பல நாட்கள் தெரிவித்தும் பட்டா ரக வாகனத்தில் பழ வியாபாரம் மேற்கொள்ளும் நபர் வர்த்தக நிலைய உரிமையாளரின் கருத்தினை செவிமடுக்காது அவ்விடத்திலேயே வியாபாரம் மேற்கொண்டு வந்துள்ளார்.


இந் நிலையில் இரு தரப்பினருக்கிடையே இன்று காலை கருத்து முர ண்பாடு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து பட்டா ரக வாகனத்தில் வியாபாரம் மேற்கொண்ட நபர் இளைஞர் குழுவினை வரவழைத்து எம் மீது தாக் குதல் மேற்கொண்டனர் என தாக்குதலுக்கு உள்ளாகி காய மடைந்த நிலையில் வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்ட குறித்த வர்த்தக நிலையத்தில் கடமையாற்றும் இரு ஊழியர்களும் தெரிவித்தனர்.

சம்பவ இடத்திற்கு விரைந்த வவுனியா பொலிஸார் அவ்விடத்தில் விசாரணைகளை மேற்கொண்டதுடன் பட்டா ரக வாகனத்தினை பொலிஸ் நிலையத்திற்கு எடுத்துச் சென்றுள்ளனர்.