வவுனியாவில் யானைத்தந்தத்துடன் ஒருவர் கைது!!

411

ஒருவர் கைது

வவுனியா மாமடு பிரிவுக்குட்பட்ட நெடுக்குளம் பகுதியில் யானைத்தந்தங்களுடன் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

வவுனியா பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் நேற்றையதினம் (09.07.2019) மாலை 5.30 மணியளவில் அப்பகுதியில் பயணிப்பவர்களை திடீர் சோதனைக்குட்படுத்திய சமயத்தில் இரு யானைத்தந்தங்களை வைத்திருந்த குற்றச்சாட்டில் சந்தேகநபர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

போகாஸ்வேவ பகுதியினை சேர்ந்த 46 வயதுடைய காமினி வீரசிங்க என்ற நபரேயே கைது செய்துள்ளதுடன் மேலதிக விசாரணைகளின் பின்னர் கைது செய்யப்பட்ட சந்தேகநபரை வவுனியா மாவட்ட நீதவான் நீதிமன்றத்தில் ஆயர்படுத்துவதற்குரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளவுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.