வவுனியா புகையிரத விபத்தில் இளைஞன் படுகாயம்!!

848

புகையிரத விபத்து

வவுனியா புளியங்குளம் புகையிரதக்கடவையில் இன்று(10.07) பிற்பகல் கடுகதி புகையிரதத்துடன் மோதி இளைஞன் ஒருவர் படுகாயமடைந்து வவுனியா பொது வைத்தியசாலை அதிதீவிர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இன்று பிற்பகல் 3 மணியளவில் யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு நோக்கிச் சென்ற கடுகதி புகையிரதத்துடன் புதூர் ஆலயத்திலிருந்து பிரதான வீதிக்குச் மோட்டார் சைக்கிளில் செல்ல முற்பட்ட இளைஞன் மீது புகையிரதம் மோதியதில் இலகநாதன் நர்மதன் (வயது 18) என்ற புதூர் பகுதியைச் சேர்ந்த இளைஞர் படுகாயமடைந்து வவுனியா பொது வைத்தியசாலையில் அதிதீவிர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

குறித்த புதூர் பகுதியில் கடந்த வருடமும் இடம்பெற்ற புகையிரத விபத்தில் இரு இளைஞர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.