மன்னார் மாணவி பதக்கம் வென்று புதியசாதனை!!

360


சௌமியா பெர்னாண்டோ



வடமாகாண பாடசாலைகளுக்கு இடையிலான 12 ஆவது தடகள விளையாட்டு போட்டியின் 18 வயது பெண்கள் பிரிவில் 100 மீட்டர் ஓட்டப்போட்டியில் மன்னார் முத்தரிப்புத்துறை றோ.க.த.க பாடசாலையைச் சேர்ந்த சௌமியா பெர்னாண்டோ 13செக்கன்களில் ஓடி முடித்து புதிய சாதனையை நிலைநாட்டி உள்ளார்.



அத்துடன் 200 மீட்டர் ஓட்டப்போட்டியில் 27.8 செக்கனில் ஓடிமுடித்து முதல் இடம்பெற்றதுடன் வர்ணச்சாண்றிதழையும் பெற்றுள்ளார். மேலும் இவர் 18 வயது பெண்கள் பிரிவில் சுவட்டு நிகழ்ச்சியின் சிறந்த வீராங்கனையாக தெரிவு செய்யப்டுள்ளார் .




அத்தோடு இதே பாடசாலையை சேர்ந்த அபிசா நீளம் பாய்தலில் 1ம் இடத்தினையும், 200 மீட்டர் ஓட்டப்போட்டியில் 2ம் இடத்தினையும், 400 மீட்டர் ஓட்டப்போட்டியில் 2ம் இடத்தினையும் பெற்றுள்ளனர். இவர் 18 வயது பெண்கள் பிரிவில் மைதான நிகழ்ச்சியின் சிறந்த வீராங்கனையாக தெரிவு செய்யப்டுள்ளார்.