ரோகித் சர்மா
உலகக்கோப்பை அரையிறுதி போட்டியில் இந்தியா தோற்ற நிலையில் ரோகித் சர்மா கண்கலங்கிய வீடியோ வெளியாகியுள்ளது.
இந்தியா – நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான அரையிறுதி போட்டி நேற்று நடைபெற்ற நிலையில் நியூசிலாந்து அணி வெற்றி பெற்று இறுதிபோட்டிக்கு முன்னேறியது. இப்போட்டியில் இந்தியா தோற்றதால் உலகக்கோப்பை தொடரிலிருந்து வெளியேறியது.
இந்திய அணி தோல்வியடைந்த நிலையில் பெவிலியனில் நின்றிருந்த ரோகித் சர்மா அதை தாங்க முடியாமல் கண்கலங்கினார். இது தொடர்பான வீடியோ சமூகவலைதளங்கள் வெளியாகி ரசிகர்களையும் கண்ணீரில் ஆழ்த்தியுள்ளது.