காதலனை நம்பிச் சென்ற இளம்பெண் : பதறியடித்து வந்த சகோதரனுக்கு காத்திருந்த அதிர்ச்சி!!

325

காத்திருந்த அதிர்ச்சி

இந்தியாவின் ஐதராபாத் மாநிலத்தில் காதலனை நம்பி ஓட்டலுக்கு சென்ற பெண் கழு த்தறுக்க ப்பட்ட நிலையில் மீட்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திராவின் நெல்லூர் மாவட்டத்தைச் சேர்ந்த வெங்கடேஷ் ஐதராபாத்தில் போட்டித் தேர்வுகளுக்கு பயிற்சி பெற்று வருகிறார். அதே பயிற்சி நிறுவனத்தில் படித்து வந்த மானஸ்வியும் இவரும் நண்பர்களாகி, பின்னர் காதலித்ததாக கூறப்படுகிறது.

கடந்த சில நாட்களாகவே மானஸ்வி, வெங்கடேஷ் உடனான பேச்சை துண் டித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த வெங்கடேஷ், தனியாக பேச வேண்டும் எனக்கூறி, ஓட்டல் ஒன்றிற்கு அழைப்பு விடுத்துள்ளார்.

அதனை நம்பி சென்ற மானஸ்வி தனியாக ஒரு அறை எடுத்து வெங்கடேஷ் உடன் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டுள்ளார். ஆனால் அங்கு வாக்குவாதம் ஏற்பட்டதால், தனக்கு ஏதாவது நடந்துவிடும் என நினைத்த மானஸ்வி தன்னுடைய சகோதரனுக்கு போன் செய்து, என்னுடைய உயி ருக்கு ஆப த்து எனக்கூறியுள்ளார்.

மேலும் மெசேஜில் தன்னுடைய இருப்பிடத்தையும் அனுப்பியுள்ளார். இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த மானஸ்வியின் சகோதரன் வேகமாக ஓட்டலுக்கு வந்து அறையை திறந்துள்ளார். அப்போது கழு த்தில் அதிக ரத் தம் வெளியேறியபடியே மானஸ்வி உயி ருக்கு போரா டியுள்ளார்.

மறுபுறம் வெங்கடேஷ் கையில் அறுக் கப்பட்டு மயக்க நிலையில் கிடந்துள்ளார். இதற்கிடையில் சம்பவம் அறிந்து வந்த பொலிஸார் இருவரையும் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.