வவுனியா பொலிசாரின் திடீர் சுற்றிவ ளைப்பு நடவடிக்கையில் 3 வாகனங்களுடன் 9பேர் கைது!!

1379


திடீர் சுற்றிவளைப்பு



வவுனியாவில் கடந்த மூன்று தினங்களாக மரக்க டத்தலில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு எதிராக பொலிசார் மேற்கொண்ட விஷேட நடவடிக்கையின் போது 3வாகனங்களுடன் 9பேரை பொலிசார் கைது செய்துள்ளதாகவும், அவர்களிடமிருந்து 20 இலட்சம் ரூபா பெறுமதியான மரக்குற்றிகளையும் கைப்பற்றப்பட்டுள்ளதாக புளியங்குளம் பொலிசார் தெரிவித்துள்ளனர்.



வன்னிப்பிராந்திய பிரதிப் பொலிஸ்மா அதிபர் அனுர அபேயவிக்கிரம தலைமையின் கீழ் செயற்பட்ட விஷேட பொலிஸ் பிரிவில் 7 பேரடங்கிய பொலிஸ் குழுவினரால் கடந்த மூன்று தினங்களாக வவுனியா புளியங்குளம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நொச்சிக்குளம், புதூர், பரசங்குளம், அனந்தர்புளியங்குளம் பகுதிகளில்




மேற்கொண்ட திடீர் சுற் றிவளை ப்புக்களின் போது 20 இலட்சம் ரூபா பெறுமதியான முதிரை குற்றிகள் 35, தேக்கங்குற்றிகள் 15 என்பனவற்றைக் கைப்பற்றியுள்ளதுடன் இதற்குப்பயன்படுத்திய பாரஊர்தி, பட்டா ரக கப் வாகனங்கள் என்பனவற்றுடன் சந்தேக நபர்கள் 9 பேரையும் கடந்த மூன்று தினங்களில் கைது செய்துள்ளதாகவும் இவர்கள் நீண்டகாலமாக இவ்வாறான சட்டவி ரோதமான நடவடிக்கையில் ஈடுபட்டு வந்துள்ளது விசாரணைகளின்போது தெரியவந்துள்ளது.


கைப்பற்றிய பொருட்களுடன் சந்தேக நபர்களை நீதிமன்றத்தில் முற்படுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் பொலிசார் மேலும் தெரிவித்துள்ளனர்.