அதிவேகத்தால் முகம் சிதறி பலியான இளைஞர் : படங்கள்!!

477


பலியான இளைஞர்



சூரியவெவ – டி 10 சந்தியில் உந்துருளியும், டிப்பர் ரக வாகனமும் நேருக்கு நேர் மோதுண்ட விபத்தில் உந்துருளி செலுத்துனர் சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளார்.



நேற்று முன்தினம் இடம்பெற்ற இந்த விபத்தில் சூரியவெவ பகுதியை சேர்ந்த 24 வயதான இளைஞர் ஒருவரே உயிரிழந்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.




அதிக வேகத்தில் பயணித்த உந்துருளி கட்டுப்பாட்டை இழந்து டிப்பர் ரக வாகனத்தில் மோதியுள்ளது. இதில் உந்துருளி செலுத்துனர் முகம் சிதைவடைந்து உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


விபத்து தொடர்பில் டிப்பர் ரக வாகனத்தின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார். உந்துருளி செலுத்துனரின் கவனயீனமே விபத்திற்கு காரணமாக அமைந்துள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.