வவுனியாவில் இந்து ஆலயங்களின் ஒன்றியத்தினர் போராட்டம்!!

469

போராட்டம்

மன்னார் திருக்கேதீஸ்வர ஆலய வீதி வளைவினை மீண்டும் நிர்மானிப்பதில் பிரதேசசபைத் தவிசாளர் அனுமதித்த பின் அதனை திரும்பவும் அவரே இடைநிறுத்துமாறு இடைக்காலதடை உத்தரவினை பிறப்பித்தமையினை ஆட்சேபித்து வவுனியா பிரதேச இந்து ஆலய ஒன்றியம், வவுனியா வடக்கு இந்து ஆலய ஒன்றியம், வெங்கலச் செட்டிக்குளம் இந்து ஆலய ஒன்றியம் இணைந்து ஏற்பாடு செய்த கண்டணப்பேரணி வவுனியாவில் இன்று (12.07.2019) வெள்ளிக்கிழமை இடம்பெற்றது.

வவுனியா கந்தசுவாமி ஆலயத்திற்கு முன்பாக 15 நிமிடங்கள் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டதுடன் அதன் பின்னர் வவுனியா மாவட்ட செயலகத்திற்கு சென்று வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர் ஊடாக அமைச்சர் மனோ கணேசனிடம் ஒப்படைப்பதற்கான மகஜரை வவுனியா மாவட்ட செயலக நிர்வாக உத்தியோகத்தர் சாந்தினி தனபாலன் அவர்களிடம் கையளித்தனர்.

போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் எம்மவரை பங்குபோடாதே வீடுவிடாய் திரியாதே, ஆயரே பிரதேச சபையை ஆட்சி செய்யாதே, ஆட்களை வெருட்டாதே, அன்பு செய்வது போல் ஆணவம் காட்டாதே, வளைவை உடைப்பதனால் வளைந்து விடமாட்டோம் என்று எழுதப்பட்ட பாதாதைகளை ஏந்திய வண்ணம் போராட்டத்தில் ஈடுபட்டனர்.