இலங்கையில் முதல் தடவையாக முதுமாணி பட்டம் பெற்றுள்ள மரண தண்டனை கைதி!!

367

மரண தண்டனை கைதி

இலங்கையில் மரண தண்டனை கைதி ஒருவர் முதுமாணி பட்டம் ஒன்றை பெற்றிருக்கிறார். இவர் சர்வதேச ரீதியில் 5ஆம் இடத்தை பெற்றிருப்பதுடன், இலங்கையில் முதல் தடவையாகவும், உலகில் 5 தடவையாகவும் சிறைக்கை தி ஒருவர் முதுமாணி பட்டம் பெறும் நிகழ்வொன்று இடம்பெற்றுள்ளது.

பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நேற்று இந்திக்க ஏக்கநாயக்க என்ற இலங்கையர் தனது முதுமாணி பட்டத்தை பெற்றுக் கொண்டுள்ளார். இவர் தற்போது குற்றச்சாட்டு ஒன்றின் பேரில் மரணதண்டனை கைதியாக உள்ள நிலையில் ஆயுள் தண்டனை கைதியாக மாற்றப்பட்டிருக்கின்றார்.

அந்தவகையில் அவர் ஏற்கனவே, பட்டம் பெற்ற ஒருவராக இருந்தார். இதன்பின்னர் 2017ஆம் ஆண்டு அவர் களனி பல்கலைகழகத்தில் முதுமாணி பட்டம் கற்கையை மேற்கொண்டார். அந்தவகையில் நேற்று அவருக்கு முதுமாணி பட்டத்திற்கான சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. தனது முயற்சிக்கு தனது மனைவியே முழுமையான ஆதரவை வழங்கியதாக இதன்போது அவர் கருத்து தெரிவித்துள்ளார்.