வாகன விபத்தில் இளைஞன் பரிதாபமாக ப லி!!

273

இளைஞன் பரிதாபமாக ப லி

மத்துகம – ஹொரன பிரதான வீதியில் தெம்புவன நார்த்துபான பகுதியில் ஏற்பட்ட வாகன விபத்தில் இளைஞர் ஒருவர் உயி ரிழந்துள்ளார். உயி ரிழந்தவர் பிலியந்தலை மடாபான பகுதியில் வசிக்கும் 28 வயதுடைய நபர் என காவற்துறை தெரிவித்துள்ளது.

மற்றொரு உந்துருளியை முந்திசெல்ல முற்பட்ட பொழுது சாரதிக்கு வேகத்தை கட்டுப்படுத்த முடியாமல் போனதால் இந்த விபத்து இடம்பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த நபரை வைத்தியசாலையில் அனுமதித்த பொழுது அவர் உயி ரிழந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

விபத்து இடம்பெற்ற பொழுது மற்றொரு உந்துருளியில் பயணித்த இருவர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தெம்புவன காவல் துறையினர் சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.