வவுனியாவில் கோதுமை மா அதிக விலைக்கு விற்பனை செய்த வியாபாரிகளுக்கு எதிராக நடவடிக்கை!!

374

வவுனியாவில் கோதுமை மா விலையை பழைய விலையை விட அதிக விலைக்கு விற்பனை செய்த மொத்த வியாபாரிகள், வியாபார நிலைய உரிமையாளர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக வவுனியா மாவட்ட பாவனையாளர் அலுவல்கள் அதிகார சபையினர் தெரிவித்துள்ளனர்.

கோதுமை மாவினை ப்ரீமா நிறுவனம் விலை அதிகரிப்புச் செயதுள்ளது. இதையடுத்து வவுனியாலுள்ள கோதுமை மா மொத்த விற்பனை வியாபாரிகள் மற்றும் சில்லறை வியாபார நிலையங்கள் சிலவற்றில் நேற்றும் இன்றும் கட்டுப்பாட்டு விலையை விட அதிகரித்த விலைக்கு விற்பனை செய்தவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, அரசாங்க வர்த்தக மானியில் புதிய விலை வெளிவரும் வரையிலும் பழைய விலைக்கு விற்பனை செய்யுமாறு வவுனியா வர்த்தகர் சங்கத்தினூடாக வியாபார நிலையங்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக தமது நடவடிக்கை தொடர்ந்து இடம்பெறவுள்ளதுடன்

புதிய விலை அரசாங்கத்தினால் அறிமுகப்படுத்தும் வரையிலும் பழைய விலையில் கோதுமை மாவினை விற்பனை செய்யுமாறும் வவுனியா மாவட்ட பாவனையாளர் அலுவல்கள் அதிகார சபையினர் தெரிவித்துள்ளனர்.

கோதுமை மா மீது விதிக்கப்படும் வரிக்கமைய ஒரு கிலோ மாவின் விலை 8ரூபா ஐம்பது சதத்தினால் அதிகரிக்க வாய்ப்புக்கள் காணப்படுவதாக ப்ரீமா நிறுவனம் நேற்று முன்தினம் அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.