வவுனியா நெடுங்கேணி பட்டடைப்பிரிந்தகுளம் அ.த.க.பாடசாலையினை மூடுவதற்கு மக்கள் எதிர்ப்பு![?]

488

பட்டடைப்பிரிந்தகுளம் அ.த.க.பாடசாலை

வவுனியா வடக்கு வலயத்திற்குட்பட்ட நெடுங்கேணி பட்டடைப்பிரிந்தக்குளம் அ.த.க.பாடசாலையினை  மூடுவதற்கான உத்தரவினை வவுனியா வடக்கு வலய பணிமனை தெரிவித்திருந்தது. இதனை எதிர்த்து அவ்வூர் மக்களால்  கடந்த 15.07.2019 அன்று கண்டன ஆர்ப் பாட்டம்  ஒன்று இடம்பெற்றது.

இதில் முன்னாள் வடக்கு மாகாணசபை உறுப்பினர் ஜி.ரி.லிங்கநாதன், வவுனியா வடக்கு பிரதேச சபை உறுப்பினர்களான பொ.தேவராசா, ஜேசுதாகர், பார்த்தீபன், தமிழ்செல்வன், கோட்டக்கல்வி அதிகாரி திரு. கிருபானந்தன் ஆகியோர் கலந்து கொண்டு, இப்பாடசாலையினை தற்காலிகமாக மூடப்படுவதனை அவ்வூர் மக்கள் விரும்பாத நிலையில் கல்வி திணைக்கள அதிகாரிகளுக்கு இவ்விடயம் தொடர்பில் எடுத்துரைக்கப்பட்டு அவர்களின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டது.

மேற்படி பாடசாலையில் கடந்த 2017இல்  புலமை பரிசில் பரீட்சையில் ஓரேயொரு மாணவன் (கெங்காதரன்.கென்றிக்சன்)தோற்றி 160 புள்ளிகளைப்பெற்று சித்தியடைந்தமை குறிப்பிடத்தக்கது.

.