வவுனியாவில் விபுலானந்தரின் 72 ஆவது நினைவு தினம்!!

529

விபுலானந்தரின் 72 ஆவது நினைவு தினம்

வவுனியாவில் நேற்று காலை இரண்டாம் குறுக்குத்தெரு சந்தியில் அமைந்துள்ள சுவாமி விபுலானந்தரின் நினைவுச்சிலையில் அன்னாரின் 72ஆவது நினைவு தினம் நினைவுகூரப்பட்டுள்ளது.

நகரசபையினரின் ஏற்பாட்டில் உபநகரபிதா சு.குமாரசுவாமி தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் முத்தமிழ் முனிவர் சுவாமி விபுலானந்தரின் வாழ்க்கை நினைவுப் பேருரையை தமிழ்மணி அகளங்கன் நிகழ்த்தினார்.

வவுனியா நகரசபை உறுப்பினர்களான எஸ்.சந்திரகுலசிங்கம், சுமந்திரன், சேனாதிராஜா, பாலபிரசன்னா, கலை இலக்கிய நண்பர்கள் வட்ட தலைவர் தமிழ் மணி அகளங்கன், தமிழ் விருட்சம் அமைப்பின் தலைவர் எஸ். சந்திரகுமார், சமூக ஆர்வலர்கள் பொதுமக்கள் எனப்பலரும் கலந்துகொண்டனர்.