சற்றுமுன்னர் யாழில் பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டில் இளைஞன் பலி!!

944

துப்பாக்கிச் சூட்டில் இளைஞன் பலி

சற்றுமுன்னர் யாழ்ப்பாணம் – மானிப்பாய் பகுதியில் பொலிஸார் மேற்கொண்ட துப்பாக்கி பிரயோகத்தில் இளைஞன் ஒருவர் பலியாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

துப்பாக்கி சூட்டிற்கு இலக்கான இளைஞன் சம்பவ இடத்திலேயே உயி ரிழந்துள்ளதாக அங்கிருக்கும் எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார். உயி ரிழந்த இளைஞனின் சடலம் தற்போது வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த இளைஞன் ஆவா குழுவினை சேர்ந்தவராக இருக்கலாமெனவும், பொலிஸார் வீதி சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த வேளையில் கறுப்பு நிற துணியால் முகத்தை மூடியவாறு சென்ற போதே துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.