வவுனியாவில் புகையிரதத்துடன் மோதுண்டு யானை பலி!!

419

யானை பலி

வவுனியா புளியங்குளம் பகுதியில் தபால் புகையிரதத்துடன் மோதுண்டு யானை பலியாகியுள்ளது. இன்று (20.07.2019) நான்கு மணியளவில் கொழும்பில் இருந்து யாழ் நோக்கி சென்ற தபால் புகையிரதமே குறித்த யானையில் மோதுன்டுள்ளது.

இப்பகுதியில் இவ் யானை தினமும் புகையிரத கடவையை கடந்து வருவதாக தெரிவிக்கின்ற போதும் குறித்த பகுதியில் யானை தொடர்பான சமிக்கைகள் இல்லாத போதே இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.

இதேவேளை இம்மாதத்தில் தாண்டிக்குளம் பகுதியிலும், மூனாமடு பகுதியிலும் 15க்கு மேற்பட்ட மாடுகளும் புகையிரதத்துடன் மோதி பலியாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.