சட்டவிரோதமாக அவுஸ்திரேலியா செல்ல முயற்சித்த 20 பேர் கைது!!

468

அவுஸ்திரேலியா..

சட்டவிரோதமான முறையில் அவுஸ்திரேலியா செல்ல முயற்சித்த 20 இலங்கையர்களை அவுஸ்திரேலிய அதிகாரிகள் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட இலங்கையர்கள் கிறிஸ்மஸ் தீவு தடுப்பு முகாமிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை குறித்த இலங்கையர்களை அவுஸ்திரேலிய எல்லைப் பகுதியில் வைத்து அதிகாரிகள் கைது செய்துள்ளனர். இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள் மீளவும் இலங்கைக்கு நாடு கடத்தப்பட உள்ளதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

கடந்த மே மாதத்தின் பின்னர் படகு மூலம் சட்டவிரோதமாக அவுஸ்திரேலியாவிற்குள் பிரவேசிக்க முயற்சித்த மூன்றாவது சந்தர்ப்பம் இதுவெனத் தெரிவிக்கப்படுகிறது.