ரசிகர்களிடம் உருக்கமான கோரிக்கை : முடிவை உத்தியோகபூர்வமாக அறிவித்தார் மலிங்க!!

1040

லசித் மலிங்க..

இலங்கை அணியின் வேகப்பந்து வீச்சாளர் லசித் மலிங்க எதிர்வரும் 26ம் திகதி பங்களாதேஷ் அணியுடனான ஒரு நாள் போட்டியுடன் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் அரங்கிலிருந்து ஓய்வுபெறவுள்ளதாக அறிவித்துள்ளார்.

இது குறித்து பேஸ்புக் பக்கத்தில் விடுத்துள்ள காணொளி ஒன்றில் ஒருநாள் தொடர் ஓய்வு குறித்து லசித் மலிங்க உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளார். லசித் மலிங்க பங்களாதேஷ் அணியுடனான இத் தொடருடன் ஒருநாள் கிரிக்கெட் குறித்த ஓய்வு தொடர்பில் உத்தியோகபூர்வமாக அறிவிப்பார் என எதிர்பார்க்கப்பட்டது.

இந்நிலையில், இன்று தனது ஓய்வு குறித்து உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளார். இது குறித்து தொடர்ந்தும் பேசிய அவர், எதிர்வரும் 26ம் திகதி தான் விளையாடும் இறுதி ஒருநாள் கிரிக்கெட் போட்டியை கண்டுகளிக்க இயலுமானால் ஆர்.பிரேமதாச மைதானத்திற்கு வருமாறும் ரசிகர்களுக்கு உருக்கமான வேண்டுகோளையும் விடுத்துள்ளார்.

இதேவேளை, லசித் மலிங்க எதிர்வரும் 2020ம் ஆண்டு இடம்பெவுற்ற சர்வதேச இருபதுக்கு – 20 உலகக் கிண்ணத் தொடர் வரை இருபதுக்கு 20 போட்டிகளில் விளையாடவுள்ளதாக ஏற்கனவே அறிவித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.